இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த போது கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை, மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டார நாயக்க (30) என்ற குறித்த பொலிஸ் உத்தியோக்கத்தர், தமிழ்நாடு தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற இடத்தில் வைத்து கடந்த செப்-04 அன்று தமிழ்நாடு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தியதை அடுத்து அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த தினம் சபுகஸ்கந்த பகுதியில் 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.