Friday 29th of March 2024 08:20:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா உயிர்ப்பலி!

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா உயிர்ப்பலி!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிர்ப்பலியானவர்களது எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் நாளாந்த தொற்று தொடர்பான அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (செப்-07) பி.பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் 5 ஆயிரத்து 776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களத எண்ணிக்கை 4 இலட்சத்து 69 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.

கொரோன தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் 89 பேர் உயிரிழந்தள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 7 ஆயிரத்து 925 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் 949 பேரும் கோயம்புத்தூரில் 524 பேரும் கூடலூரில் 398 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் இதுவரை 4 இலட்சத்து 10 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வெளியேறிய நிலையில் தற்போது 51 ஆயிரத்து 215 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE