அமெரிக்காவின் ஒரிகான் பிராந்தியத்தில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவிவரும் நிலையில் சுமார் 5 இலட்சம் பேரை இந்தப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுப் பகுதியில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துகளில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 100 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. கலிபோர்னியா, ஒரிகான், வொஷிங்டன் பகுதிகள் மிக மோசமாக காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போர்ட்லாந்தின் தெற்கு பகுதியில் மொலாலா நகரில் இருந்து 9,000 பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரிகானில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 40,000 பேரை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 5 இலட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை உள்ளது என ஒரிகான் ஆளுநர் கடே ப்ரவுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “
அமெரிக்காவில் கலிபோர்னியா, ஒரிகான், வொஷிங்டன் பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பற்றியெரிந்துவரும் காட்டுத் தீக்கு இதுவரை 24 போ் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் மட்டும் 39, 000 வீடுகள் தீக்கிரையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.