"மாகாண சபை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது சகோதரர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் பெரும் சமர் ஆரம்பித்துள்ளது."
- இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
மு.காவின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஒழித்து மாகாண சபை முறைமையை இல்லாமலாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சி எடுக்கின்றார். இதனை முன்னெடுக்கும் பொறுப்பை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு வழங்கியுள்ளார்.
இதனை ஜனாதிபதியின் சகோதரரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச விரும்பவில்லை. மாகாண சபை முறைமையை ஒழிக்கக் கூடாது என்பதில் பஸில் உறுதியாக இருக்கின்றார். இந்த விடயத்தைக் கையாள அவரும் ஒருவரை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுகின்றார். பஸில் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியா, இலங்கை