கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கில் உள்ள கமிதுகா என்ற பகுதியில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 50 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர்.
டெட்ராய்ட் சுரங்கத் தளத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து திடீரென சுரங்கத்துக்குள் பாரியளவில் மண் சரிந்தது. இதன்போது அங்கு வேலை பார்த்த பல சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர் என உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் அங்கு இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.