கொரோனா வைரஸ் தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை இல்லாத வகையில் மிக அதிகளவான தொற்று நோயாளர்கள் கடந்த 24 மணி நேரங்களில் பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 3 இலட்சத்து 07 ஆயிரத்து 930 பேர் உலகெங்கும் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரங்களில் 5,500-க்கும் அதிகமானவா்கள் உலகெங்கும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவற்றுடன் உலகில் கொரோனாவுக்குப் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலேயே அதிகளவான தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, உலகளவில் 28 மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா். அவற்றில் 50 வீதமான தொற்று நோயாளர்கள் அமெரிக்காவில் மட்டும் உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் 94 ஆயிரத்து 372 புதிய தொற்று நோயாளா்கள் பதிவாகியுள்ளனர். அமெரிக்கா 45 ஆயிரத்து 523 பேரும், பிரேசில் 43 ஆயிரத்து 718 பேரும் நேற்று தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் 1,000-க்கும் மேற்பட்ட புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரங்களில் கோவிட் -19 தொடர்பான நோயால் 874 பேர் இறந்துவிட்டதாக பிரேசில் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவா்களின் தொகையில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருந்த பிரேசில் 3 –ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்