வவுனியா மறைக்கோட்டத்தைச் சேர்ந்த ஓமந்தை பங்கின் புதிய சின்னக்குளம் என அழைக்கப்படும் பற்றிமா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட நற்கருணை ஆண்டவர் சிற்றாலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் நேற்று ஞாயிற்றுக் கிழமை(13) காலை அபிசேகம் செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி. சுகுணறாஜ் குரூஸ் அடிகளார், ஆயரின் செயலர் அருட்பணி.நிக்ளஸ் அடிகளார், அருட்தந்தையர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்