நேபாளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சிந்துபால்சௌக் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, மிகப் பெரிய மணல்குன்று சரிந்து விழுந்தது. இதில் நாக்புஜே, பிக்கார்கா, நேவோர் தோலே ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டபோது, கிராமத்து மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனா்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 9 உடல்களும், போடேகொஷி மற்றும் சங்கோஷி ஆறுகளிலிருந்து இரு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் 11 வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டதாக முதல் கட்ட சேத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் இவ்வாண்டு இதுவரை 17 ஏற்பட்ட நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் சிக்கி குறைந்தது 55 போ் உயிரிழந்துள்ளதாக நேபாள பேரிடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.