Wednesday 24th of April 2024 10:05:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 5 இலட்சங்களை கடந்து தொடரும் கொரோனா ஆதிக்கம்!

தமிழ்நாட்டில் 5 இலட்சங்களை கடந்து தொடரும் கொரோனா ஆதிக்கம்!


தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் நாளாந்த தொற்று சற்று குறைவடைந்திருந்தாலும் மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 5 இலட்சங்களை கடந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் நாளாந்த கொரோனா தொற்று நிலவர அறிக்கையின் அடிப்படையில் இன்று மாலை வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக இன்று 5 ஆயிரத்து 752 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 8 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 991 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து தற்போது 46 ஆயிரத்து 912 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE