கனடா - ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 313 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். ஜூன் ஆரம்பத்தின் பின்னர் மாகாணத்தில் பதிவான அதிகளவு தொற்று நோயாளர் தொகையாக இது உள்ளது.
ஒன்ராறியோவில் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து அதிகரித்து வருகின்றது. செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 200 -க்கு மேல் பதிவாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாகாணத்தில் 204 தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று இதில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் திடீா் அதிகரிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக மாகாண சுகாதார அமைச்சா் கிறிஸ்டின் எலியட் கூறினார்.
இது தொற்று நோயின் இரண்டாவது அலையின் தொடக்கமா? இல்லையா? என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் குழப்பமடையவில்லை. தொடர்ந்து நிதானமாக தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம் எனவும் கிறிஸ்டின் எலியட் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா