பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவா்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் பாகிஸ்தானில் பெண் ஒருவா் இரண்டு பேரால் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலியல் வல்லுறவுக் குற்றவாளி ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் குற்றவாளிகள் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்பதே தனது விருப்பம் என இம்ரான் கான் கூறினார்.
ஆனால் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதால் ஐரோப்பிய ஒன்றியம் பாக்கிஸ்தானுக்கு வழங்கும் ஜிஎஸ்பி-பிளஸ் வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகள் நிறுத்தப்படலாம்.
எனவே, தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை அமுல் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.