Thursday 28th of March 2024 09:41:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் பிடிக்குள் இலங்கை: 3 நாட்களில் 93 பேருக்கு தொற்று! ஒருவர் பலி!

கொரோனாவின் பிடிக்குள் இலங்கை: 3 நாட்களில் 93 பேருக்கு தொற்று! ஒருவர் பலி!


உலகளாவிய உயிர்க்கொல்லி நோயாக மாறியுள்ள கொரோனாவின் பிடிக்குள் இலங்கை சிக்கி வரும் நிலையில் கடந்த 3 நாடக்ளில் மட்டும் 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பும் இலங்கையர்கள் உள்ளிட்டோரால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த 12ம் திகதி 26 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 13ம் திகதி 39 புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை நேற்றைய தினம் 14ம் திகதி 28 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்ததுடன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு கடந்த 3 நாட்களில் மட்டும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

நேற்றைய தினம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கும், இந்திய கடற்படையைச் சேர்ந்த 5 பேருக்கும், பங்களாதேசில் இருந்து நாடு திருதம்பியவர்களில் மேலும் 5 பேருக்கும், பக்ரைனில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 4 பேருக்கும் குவைத்இ கட்டார்இ வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் தலா ஒவ்வொருவருக்கும் என 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3262 இல் இருந்து 3265 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சைக் கூடங்களில் சிக்கை பெற்று வருபவர்கள் இன்று மேலும் 11 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது எண்ணிக்கை 3016 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சைக் கூடங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 236 ஆக உள்ளது.

இதேவேளை பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை இலங்கையில் கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE