தமிழ்நாட்டில் கொரோனா ஆதிக்கம் நீடித்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் நாளாந்த கொரோனா தொற்று நிலவர அறிக்கையின் அடிப்படையில் இன்று (செப்-15) மாலை வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக இன்று 5 ஆயிரத்து 697 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றும் 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் 4 இலட்சத்து 58 ஆயிரத்து 900 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து தற்போது 46 ஆயிரத்து 806 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை