கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் 4 மணியளவில் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை பல்கலைக்கழக சமூகம் வரவேற்றது. தொடர்ந்து விவசாய பீடத்தின் செயற்பாடுகள், குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன் பல்கலைக்கழக மாணவர்களின் விவசாய செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டடத்தினையும் பார்வையிட்ட குழுவினர் பல்கலைக்கழக சமூகத்துடன் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
குறித்த விஜயத்தில் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேயுடன் பண்ணை மேம்பாடு மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டிபி கேரத், நெல் மற்றும் தானியவகைகள் சேதன உணவுகள் அமைச்சர் சசேந்திர ராஜபக்ச, பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கயன் இராமநாதன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி