Thursday 18th of April 2024 12:16:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
மூத்த விடுதலைப் போராளி குட்டிமணியின் மனைவியின் இறுதிநிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது!

மூத்த விடுதலைப் போராளி குட்டிமணியின் மனைவியின் இறுதிநிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது!


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குட்டிமணி அவர்களின் மனைவி இராஜரூபராணி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்றுள்ளது.

லண்டனில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் அவர்களது குடும்பந்தவர்கள் மற்றும் ரெலோ பிரித்தானிய கிளையினரினதும் ஒழுங்கமைப்பிலும் உணர்வு பூர்வமாக நேற்றைய தினம் லண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் அவர் வசித்த இல்லத்தில் அவரது உடல் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ரெலோ இயக்க உறுப்பினர்கள் என பலர் இறுதி வணக்கம் செலுத்தியிருந்தனர்.

இராஜரூபராணி அவர்களின் உடலுக்கு ரெலோ கட்சியின் சார்பில், ரெலோ கட்சியின் கொடி பிரித்தானியா கிளையினரால் போர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரத்தியேகமாக ஒழுங்கு செய்ப்பட்ட இடத்தில் வைத்து இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இராஜரூபராணி அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த செப்-05 அன்று லண்டனில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE