முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், நேற்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் பெறுவதற்கு டெனீஸ்வரன் தரப்பு மறுத்திருந்தது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்த குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவாங்குவதற்கு அவர் மூன்று நிபந்தனைகளை முன்வைத்த நிலையில் அதனை விக்னேஸ்வரன் ஏற்க முன்வராததால் வழக்கு விசாரணை இன்று தொடர்ந்தது.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாள் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்த போது, எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழக்கை கைவாங்குவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தரப்பில் கூறப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குறித்த வழக்கை முடித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, வட மாகாணம்