Friday 19th of April 2024 06:20:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
20 நகல் வடிவில் காணப்பட்ட தவறைத் திருத்த நடவடிக்கை! - அமைச்சர் கம்மன்பில!

20 நகல் வடிவில் காணப்பட்ட தவறைத் திருத்த நடவடிக்கை! - அமைச்சர் கம்மன்பில!


அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் நகல் வடிவில் காணப்பட்ட தவறுகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

"தவறுகள் இழைப்பது இயல்பு. அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே முக்கியம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை, பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் போன்ற நிறுவனங்களைக் கணக்காய்வு செய்ய வேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு முன்னெடுக்கும் கணக்காய்வு நடவடிக்கையின் கீழ் அவ்வாறான நிறுவனங்களைக் கொண்டுவர வேண்டும் என நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்த நகலை மீளாய்வு செய்த குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதியும் பிரதமரும் கருத்தில்கொள்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE