கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கண்டறியும் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணி தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாடு முழுவதும் 1,810 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றுடன் இலங்கையில் மொத்தம் 257,477 பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இன்று புதன்கிழமை காலை வரை மொத்தம் 41 ஆயிரத்து 192 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 224 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களில், 07 பேர் பூசா தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்தவர்கள். சிலோன் லொட்ஜ் தனிமைப்படுத்தில் மையத்தில் இருந்து 11 பேர், ஹோட்டல் மந்தாரம் மையத்தில் இருந்து 79 பேர், ப்ரெஸ்கோ சுற்றுலா மையத்திலிருந்த 11 பேர், ஹோட்டல் கயா சுற்றுலா விடுதி மையத்தில் ஒருவா், பியகம சுற்றுலா மையத்திலிருந்த 05 பேர் , புனானி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 51 போ், பெரியகாடு மையத்திலிருந்த 58 பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 59 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,255 போ் தொடர்ந்து தனிமைப்படுத்ப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தேசிய கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 11 போ் இன்று குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவற்றுடன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்ட 638 போ் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
கந்தைக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 11 போ் மட்டுமே தற்போது செயலில் உள்ள தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை