கொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள 'வீதி ஒழுங்கை'ச் சட்டத்தை மீறும் சாரதிகளிடம் நாளை (17) முதல் தண்டப்பணம் அறவிடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் கொழும்பு நகருக்குள் பிரதான வீதிகளில் 'வீதி ஒழுங்கை'ச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று வரையில் சாரதிகளுக்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டு அவர்களை அறிவுறுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் நாளை வியாழக்கிழமை முதல் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்தை மீறுவோரிடம் 2 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.