Wednesday 24th of April 2024 01:35:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
ரிஷாத்திடம் மூன்றாம் நாளாகவும் தீவிர விசாரணை!

ரிஷாத்திடம் மூன்றாம் நாளாகவும் தீவிர விசாரணை!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் மூன்றாவது நாளாக இன்றும் விசாரணைகள் நடைபெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று முற்பகல் ஆணைக்குழுவில் அவர் ஆஜராகினார்.

அவரிடம் நேற்றுமுன்தினமும் அதேபோல் நேற்றும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசீமின் ஆலோசகராகச் செயற்பட்ட நவ்பர் மௌலவியிடம் இன்றும் ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது. இரகசியப் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தற்சமயம் இருக்கின்ற அவரிடம் நேற்று 6 மணிநேர விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE