Friday 29th of March 2024 03:03:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
3 கோடியை கடந்தது உலகளாவிய கொரோனா தொற்று!

3 கோடியை கடந்தது உலகளாவிய கொரோனா தொற்று!


கட்டுபாடின்றி தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று உலகளாவிய பேரனர்த்தமாக மாறியுள்ள நிலையில் உலகளாவிய கொரோனா தொற்று 3 கோடியை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 79 ஆயிரத்து 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தற்போதைய நிலையில் 3 கோடியை கடந்து 3 கோடியே 25 ஆயிரத்து 473 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உலகளாவில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 9 இலட்சத்து 44 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து 2 கோடியே 17 இலட்சத்து 92 ஆயிரத்து 847 பேர் மீண்டுள்ள நிலையில் 72 இலட்சத்து 87 ஆயிரத்து 919 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 68 இலட்சத்து 28 ஆயிரத்து 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 2 இலட்சத்து ஆயிரத்து 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 83 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 51 இலட்சங்களை கடந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 இலட்சத்து 21 ஆயிரத்து 686 தொற்றாளர்கள் இதுவரை இனம் காணப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் 10 இலட்சத்து 79 ஆயிரத்து 519 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 18 ஆயிரத்து 917 பேர் உயிரிழந்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE