கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மக்கள் ஒன்று கூடுவதற்கான அதிகபட்ச எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்து மாகாண அரசு பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
மாகாணத்தில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை அண்மைக் காலங்களில் 200-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்நிலையிலேயே மக்கள் ஒன்றுகூடுவதற்கான தொகையை மட்டுப்படுத்த அரசு தீா்மானித்துள்ளது.
இதற்கான திட்டம் குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனினும் உத்தியோகபூர்வ முடிவுகள் எவையும் எடுக்ப்படவில்லை.
ஒன்ராறியோவில் தற்போது உள்ளரங்குகளில் 50 பேரும் திறந்த வெளியிடங்களில் 100 பேரும் அதிகபட்சமாக ஒன்றுகூட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.