இந்திய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவா் தனது ருவிட்ட பக்கத்தில் நேற்று உறுதி செய்துள்ளார்.
நான் உடல் பலவீனமாக உணர்ந்ததை தொடர்ந்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரை அணுகினேன். கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்தப் பதிவில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அனைவரின் ஆசிகளுடன் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இருப்பினும் பிறரது பாதுகாப்புக்காக நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
என்னுடன் அண்மைக் காலங்களில் தொடர்பில் இருந்த அனைவரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா