ஒன்ராறியோ மாகாணத்தில் பாடசாலைகளுடன் தொடர்புடைய மேலும் 12 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் நேற்று புதன்கிழமை பதிவாகியுள்ளன.
நேற்று உறுதி செய்யப்பட்ட பாடசாலைகளுடன் தொடர்புடைய தொற்று நோயாளர்களில் மாணவர்கள் ஆறு பேரும் பாடசாலைப் பணியாளர்கள் 4 பேரும் உள்ளடங்குகின்றனர்.
அதே நேரத்தில் இரண்டு நபர்கள் குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.
தொற்று நோய் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஒன்ராரியோவில் இம்மாதம் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டு மாணவா்கள் வகுப்பறைக்களுக்குத் திரும்பினர்.
பாடசாலைகள் திறப்பட்ட பின்னர் ஒன்ராறியோ பாடசாலைகளில் மொத்தம் 41 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் உரிமம் பெற்ற சிறுவர் பராமரிப்பு மையங்களில் 52 பேர் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா