Saturday 20th of April 2024 04:26:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் கல்வியன்காட்டில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் படுகாயம்!

யாழ் கல்வியன்காட்டில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் படுகாயம்!


வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெடுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கப்பட்டது.

அவர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்ற போது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு கும்பல், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE