Friday 29th of March 2024 05:23:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் செம்மணி மயானம் அருகே ஒரு வகையான நரிகள் இனங்காணப்பட்டுள்ளது!

யாழ் செம்மணி மயானம் அருகே ஒரு வகையான நரிகள் இனங்காணப்பட்டுள்ளது!


யாழ் கைதடி ஏ9வீதியில் இருந்து 50மீற்றர் தொலைவில் செம்மணி மயானம் அருகே ஒரு வகையான நரிகள் இனங்காணப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை குறித்த நரியின் நடமாட்டம் காணப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நரிகள் அப்பகுதிக்கு எவ்வாறு வந்தன என்பது தொடர்பிலும், அதனால் மனிதர்களிற்கு ஆபத்து ஏற்படுமா என்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இவற்றால் வீட்டு வளர்ப்புக்களான கோழி, ஆடு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமிடத்து வாழ்வாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த காட்டு விலங்குகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE