Tuesday 16th of April 2024 01:40:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
வுஹானில் கொரோனா இறப்புக் குறித்து  ஆராய்ந்த  4 ஊடகவியலாளர்கள்  மாயம்!

வுஹானில் கொரோனா இறப்புக் குறித்து ஆராய்ந்த 4 ஊடகவியலாளர்கள் மாயம்!


கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனா – வுஹான் நகரில் பதிவான உண்மையான கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்த அந்நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகச் செயற்பாட்டாளர்கள் 4 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் இதுவரை இல்லை என அங்குள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2012-இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அங்கு ஊடக சுதந்திரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அரசின் தணிக்கை, பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் சில சமயங்களில் சிறைத்தண்டனை என ஊடகவியலாளர்கள் மீது அங்கு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

சில சுயாதீன ஊடகவியலாளர்கள் வெளிநாட்டு அல்லது தனியார் ஊடகங்களுக்குப் பணியாற்ற முடியாது தடுக்கப்பட்டுள்ளனர் எனவும் அங்குள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE