திருகோணமலை விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அதுகொரள மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன்போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் குறிப்பாக வன இலாகா மற்றும் வனபரிபாலனசபையினரால் எல்லையிடப்படும் குடியிருப்புக் காணிகள் தொடர்பாகவும் விவசாய நிலங்கள் தொடர்பாகவும் சூடான விவாதங்கள் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கபில அவர்கள் வனஇலாகாவினால் கையகப்படுத்தப்பட்ட வயற் காணிகள் மற்றும் பெரும்போக விவசாயக்காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மும்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை