Saturday 20th of April 2024 07:01:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
விஜயகலாவிடம் ஐந்து மணி நேரம் தீவிர விசாரணை!

விஜயகலாவிடம் ஐந்து மணி நேரம் தீவிர விசாரணை!


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனிடம் சுமார் 5 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஞானலிங்கம் மயூரன் என்கின்ற நபரது முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

தான் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு விஜயகலா மகேஸ்வரனின் தலையீடுகள் இருந்தன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்தே மேற்படி விஜயகலா மகேஸ்வரனிடமும் அதேபோல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தராகிய ஞானலிங்கம் மயூரனிடமும் இன்று 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE