கொழும்பில் சில பிரதேசங்களில் இன்று (17) இரவு முதல் நாளை (18) காலை வரையில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு 01 இற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு - 02 , 03 , 07 , 08 , 09 , 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடனேயே நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.