யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தரோடை - அளவெட்டி வீதியில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது அதிகாலை வேளை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பத்திரிகை விநியோகஸ்தராக ஈடுபட்டுவருகின்ற அளவெட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் - மதனகரன் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியிருக்கின்றார்.
அதிகாலை 4.30 மணியளவில் கந்தரோடை - அளவெட்டி வீதியில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த வீதியில் மருதமரத்தை அண்மித்த பகுதியில் காணப்படும் பாலத்தடியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்தப் பகுதி இரத்தைக் கறை படிந்து காணப்படுவதாகவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் வழிபறி முயற்சி என்று தாம் அறிந்ததாக கிராம மக்கள் சிலர் தெரிவிக்கின்ற போதிலும் வாள்வெட்டுக்கான சரியான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.
மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்