யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் அதிகாலை பத்திரிகை விநியோகஸ்தர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் பணியாற்றும் அளவெட்டியை பூர்வீகமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலச்சந்திரன் - மதனகரன் (வயது 40) யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றின் விநியோகஸ்தராகவும் பகுதி நேரமாக பணியாற்றிவருகின்றார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் பத்திரிகை விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கந்தரோடை கந்தரோடை உத்திரிகைக் குளத்திற்கருகில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற நபர்கள் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டு அவர் மீது வாளினால் சரமாரியாக வெட்டிப் படுகாயப்படுத்தியிருக்கின்றனர்.அதன் பின்னர் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றிருக்கின்றனர்.
காயமடைந்த அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்