ரஷிய ஜனாதிபதி விளாடிமீா் புடினுக்கு எதிராகப் போராடிவரும் எதிர்க்கட்சி தலைவா் அலெக்ஸே நவால்னிக்கு அவர் தங்கியிருந்த விடுதி அறையில் வழங்கப்பட்ட குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
உடலில் விசம் கலந்து பாதிக்கப்பட்டு கோமாவுக்குச் சென்ற நிலையில் அலெக்ஸே நவால்னி ஜேர்மனி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜோ்மனி அறிவித்துள்ளது.
இந்நிலையில் அலெக்ஸே நவால்னி, விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னா் சொ்பியாவின் டோம்ஸ்க் நகரில் தங்கியிருந்த விடுதியிலேயே அவருக்கு நீரில் விசம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இருந்த தண்ணீா் போத்தலில் நோவிசோக் (Novichok) நச்சு வேதிப்பொருள் படிந்திருந்தது.
இதன் மூலம், விமான நிலையம் வருவதற்கு முன்னரே அவருக்குத் தெரியாமல் நஞ்சூட்டப்பட்டுள்ளது என அவரது ஆதரவாளா்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீா் புடினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் முக்கிய தலைவரான அலெக்ஜே நவால்னி பல முறை ரஷ்ய அரசால் சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டும் அவர் மீது நச்சு வேதிப்பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.