Tuesday 16th of April 2024 12:14:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாதிக்கும் மேல் கொரோனா தடுப்பூசியை  வாங்க வளர்ச்சியடைந்த நாடுகள் ஒப்பந்தம்!

பாதிக்கும் மேல் கொரோனா தடுப்பூசியை வாங்க வளர்ச்சியடைந்த நாடுகள் ஒப்பந்தம்!


கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் தடுப்பூசியின் பெரும்பகுதியை வாங்க வளர்ந்த நாடுகள் ஏற்கனேவே ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக மருந்துகளின் விற்பனை வழிமுறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் ஒக்ஸ்பாம் (Oxfam) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகளின் மொத்த உற்பத்தியில் சரிபாதியை பெறுவதற்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகள் செய்துள்ளன.

உலகளவில் இதுவரை 5 கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மொத்த விநியோகத்துக்காக கணக்கிடப்பட்டிருக்கும் 530 கோடி தடுப்பூசிகளில் 270 கோடிகளை ஒப்பந்தத்தின்படி இந்த நாடுகள் பெற்றுவிடும்.

மீதமுள்ள 260 கோடி தடுப்பூசிகளைப் பெறுவதற்கு இந்தியா, பங்களதேஸ், சீனா, பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ உள்ளிட்ட வளரும் நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்நிலையில் , உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு கொள்ளை நோய்க்கான தடுப்பு மருந்தானது, அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும். பணத்துக்காக ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் மருந்துகளை வழங்குவது மனித உரிமைகளுக்கு எதிரானதாகும் என ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE