Friday 19th of April 2024 01:07:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
கட்டைப்பிராய் பகுதியில் விபத்து! ஆபத்தான நிலையில் பெண்! (2ஆம் இணைப்பு)

கட்டைப்பிராய் பகுதியில் விபத்து! ஆபத்தான நிலையில் பெண்! (2ஆம் இணைப்பு)


யாழ்ப்பாணம் பருதித்துறை வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுபேசன் பவானி (வயது 33) என்று தெரிவிக்கப்படுகின்ற குறித்த பெண் கட்டைப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டபோது பிரதான வீதியில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதாலேயே விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் சாரதி பேருந்துடன் அங்கிருந்து தப்பி ஓடியதால் படுகாயம் அடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண் ஆபத்தான நிலையில் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE