Tuesday 23rd of April 2024 11:01:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்ற உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லிபியா, கொங்கொங் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் தலா ஒவ்வொருவர் உள்ளிட்ட ஐந்து பேருக்கே இவ்வாறு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் 17 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 60 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் மூலம் தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 208 ஆக உள்ளது.

கொரோன தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE