Wednesday 24th of April 2024 08:14:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
காரைநகரில் மூலிகை  மரக்கன்றுகள் நடுகை!

காரைநகரில் மூலிகை மரக்கன்றுகள் நடுகை!


சுதேச மருத்துவ அமைச்சினால் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலிகை மர உற்பத்தி திட்டத்தின் கீழ், வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைநகர் பிரதேச செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந்த விசேட வைபவத்தில் பிரதேச செயலாளர் ம.ஜெகூ முதலாவது மரக்கன்றை நடுகை செய்து இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி பா.றேவதி மரக்கன்றை நாட்டினார். புங்கு, மருது ஆகிய மரங்கள் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அன்ரன் யேசுதாஸ், காரைநகர் சித்த மத்திய மருந்தகத்தின் சமூக மருத்துவ உத்தியோகத்தர், பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE