Thursday 28th of March 2024 12:10:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸில் முன்னொருபோதும் இல்லாதவாறு  நேற்று ஒரேநாளில் 13,215 பேருக்குக் கொரோனா!

பிரான்ஸில் முன்னொருபோதும் இல்லாதவாறு நேற்று ஒரேநாளில் 13,215 பேருக்குக் கொரோனா!


பிரான்ஸில் முன்னொருபோதும் இல்லாத வகையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 13,215 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

அத்துடன் பிரான்ஸில் 154 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாகின. கடந்த 4 மாதங்களின் பின்னர் பதிவான அதிகளவு கொரோனா மரணங்களாக இது உள்ளது.

நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 428,696 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 7 நாட்களாக தினசரி தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 9,300 என்ற அடிப்பயைில் பதிவாகி வருகிறது. கடந்த மே மாதத்தில் தினசரி சராசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 272 ஆக இருந்த நிலையில் தற்போது சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா தொற்று பரிசோதனை தற்போது இலவசமாக முன்னெடுக்கப்படுகிறது. இதனையடுத்து அங்கு சோதனை அளவு கிட்டத்தட்ட 6 மடங்காக அதிகரித்துள்ளது.

தொற்று நோய் தொடர்ந்து அதிவேகமாகப் பரவிவரும் நிலையில் பல்வேறு நகரங்களில் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு ரிவியராவில் உள்ள நைஸ் நகரில் பொது இடங்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்சேய் மற்றும் போர்டியாக்ஸ் நகரங்கள் கடந்த திங்கட்கிழமை முதல் 10 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளன.

எனினும் பிற இடங்களை விட விரைவாக தொற்று நோய் பரவி வரும் பாரிஸ் நகரில் 10 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்கான தடை இதுவரை விதிக்கப்படவில்லை. எனினும் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது ஆபத்தானது என நகர மக்களை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் எச்சரித்தனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE