இரண்டாம் இணைப்பு
நவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகத்திரனம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். கை, கால்களில் சிறிய காயங்கள் காணப்படுவதால் விச உயிரினங்கள் எதாவது தீண்டி அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வரம்புகட்டுவதற்காக வயலுக்குச் சென்றவரே உயிரிழந்துள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
முன்னைய இணைப்பு
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவாலி பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
நவாலியின் வயல்வெளியில் குறித்த சடலம் காணப்படுகின்ற போதிலும் சடலத்துக்கு உரியவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்