ஒன்ராறியோ மாகாணத்தில் பாடசாலைகளுடன் தொடர்புடைய மேலும் 11 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இவற்றுடன் இந்த மாதம் பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் மாகாணத்தில் 60 பாடசாலைகளுடன் தொடர்புடைய 72 தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் உரிமம் பெற்ற சிறுவர் பராமரிப்பு மையங்களில் 76 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் ஒன்ராறியோ மாணவர்கள் இந்த மாதம் பாடசாலைகளுக்குத் திரும்பினர்.
இந்நிலையில் பாடசாலைகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்று நோய் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பாடசாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் ஐந்து போ் மாணவா்களாவர். ஊழியர்களிடையே நேற்று தொற்று நோயாளிகள் பதிவாகவில்லை. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட ஆறு நபர்கள் குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.
ரொராண்டோவில் - 5 பாடசாலைகளில் தொற்று நோயாளிள் நேற்று அடையாளம் காணப்பட்டனர். அதேபோன்று டர்ஹாம்: 1, தலாம்: 4,யோர்க்: 1 என பாடசாலைகளில் நேற்று தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா