மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் உள்ளிட்ட 9 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 9 பேரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தனுரொக் உள்ளிட்ட 9 பேர் ஒன்றுகூடியுள்ளதால் வன்முறைச் சம்பவம் இடம்பெறலாமென கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
எனினும் சந்தேக நபர்கள் 9 பேருக்கும் எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லை என்றும் முறைப்பாடுகள் எவையும் மானிப்பாய் பொலிஸுல் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனுரொக் உள்ளிட்ட 9 பேரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்