சீனாவில் புருசெல்லோசிஸ் (brucellosis) எனப்படும் ஒருவகைப் பக்டீரியாவால் ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஜோவின் 3,245 பேர் ப்ரூசெல்லோசிஸ் பக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்தப் பக்டீரியாவால் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று லான்ஜோ நகர சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
நகரத்தின் 2.9 மில்லியன் மக்கள்தொகையில் 21,847 பேரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதில் 3,245 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த பாக்டீரியா மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது எனவும், பாக்டீரியா உள்ள உணவுப் பொருட்களை உண்பதால் பரவும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளானவர்கள் தலைவலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் நாள்பட்ட மூட்டுவலி ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா