முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க , மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் சிலர், அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுடன் ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் அந்த ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்று முற்பகல் இவர்கள் அனைவரும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசின்போது தான் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டதாகத் தெரிவித்து, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமையவே, இவர்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.