முல்லைத்தீவு மாவட்டம் இரணைப்பாலை பகுதியேச் சேர்ந்த மீனவர் ஒருவர் மற்றுமொரு மீனவருடன் கடலுக்கு சென்ற நிலையில் வீடுதிரும்பாது காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரணைப்பாலையைச் சேர்ந்த லோ. பால்ராாஜ் (வயது 35) என்பவர் செல்வா என்ற மாதகலைச் சேர்ந்த மற்றுமொரு மீனவருடன்(வயது 25) கடந்த 10 ஆம் திகதி கடலுக்கு சென்றுள்ளார்.
மூன்று நாட்களுக்கு கடலில் தங்கி நின்று தொழில் செய்துவிட்டு திரும்புவதாக கூறி சென்ற கணவர் இன்று வரையில் மீண்டும் திரும்பவில்லை என பால்ராஜின் மனைவியால் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் ஊடாக கடற்படையினருக்கும், மீன்பிடி அமைப்புக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு