மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வீசிவரும் சூறைகாற்றினால் தனூஷ்கோடியில் 10 முதல் 20 அடி உயர ராட்ச அலைகள் ஏழுப்பி வருவதால் நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வழக்கத்திற்க்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்து வந்தது. இதனால் கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகளால் கடந்த வாரம் முழுவதும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று முதல் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி, மற்றும் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் தனூஷ்கோடி அருகே அமைந்துள்ள முகுந்தராயர் சத்திரம் மீன் இறங்கு தள பாலம் மீது ராட்சத அலைகள் மோதுவதால், கடல் அலைகள் 10 அடி முதல் 20 அடி உயரத்திற்கு எழுந்து வருகிறது. இதனால் தென் கடல் பகுதிகளான தனூஷ்கோடி, பாம்பன், தெற்குவாடி பகுதிகளில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
மேலும் தனூஷ்கோடி அருகே பாறையடி கடற்கரைப்பகுதியில் கரையில் நங்கூரமிடப்பட்டு நிறுத்திவைக்கப்படிருந்த நாட்டு படகு கயிறு அறுந்து ராட்சத அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, மன்னார்