"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இரத்துச் செய்யப்படமாட்டாது."
- இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் முறையாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் முறையாக இடம்பெறுகிறது. ஒரு சில மாகாண சபைகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவை திருத்தம் செய்யப்பட்டு மாகாண சபைகளும் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும்" - என்றார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பல தடவைகள் பகிரங்கமாகத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்தத் திருத்தச் சட்டம் ஒருபோதும் இரத்துச் செய்யப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.