Friday 19th of April 2024 11:59:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
20 இல் சு.கவுக்கு திருப்தியில்லை;  தயாசிறி ஜயசேகர!

20 இல் சு.கவுக்கு திருப்தியில்லை; தயாசிறி ஜயசேகர!


"அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது பொதுவான நிலைப்பாடாகும். எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்படுகின்ற குழுவின் அறிக்கைக்கு அமையவே எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படும்."

- இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்து சுயாதீனமாக ஆராயும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் குழு நியமிக்கப்படாமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது =:-

"இவ்வாரத்தில் 20 தொடர்பில் ஆராயும் குழு நியமிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்தக் குழுவினால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும். அதனால் தற்போது விரிவாக எந்தக் கருத்தையும் எம்மால் கூற முடியாது" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE