இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3287 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே 3284 ஆக காணப்பட்டிருந்த நிலையில் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 18 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3088 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை