Thursday 18th of April 2024 04:12:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாத் தொற்று 3 கோடியைக் கடந்தது! பத்து இலட்சத்தை நெருங்கும் உயிர்ப்பலி!

கொரோனாத் தொற்று 3 கோடியைக் கடந்தது! பத்து இலட்சத்தை நெருங்கும் உயிர்ப்பலி!


உலக அளவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே பத்து இலட்சத்தைக் கடந்துள்ளது. அதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை பத்து இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை ஒன்பது இலட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களில் இரண்டு கோடியே 25இலட்சம் பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிக தொற்றுக்குள்ளானவர்கள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 69 இலட்சம் பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல அதற்கு அடுத்ததாக இந்தியாவில் 54 இலட்சம் பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் 86 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிறேசிலில் 45 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையில் 1 இலட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE