திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரதிவாதிகள் 20 பேரும் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக யாழ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகளை தடைசெய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் 20 நபர்களின் பெயர் குறிப்பிட்டு குறித்த நிகழ்வினை நடாத்த தடை உத்தரவு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
குறித்த வழக்கின் வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ் நீதிமன்றில் இடம்பெற உள்ளதனாாாஅலல இதனால் குறித்த வழக்கின் எதிராளிகள் 20 பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகரச முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட்ட இருபது பேரும் தற்போது நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்